முகப்பு
நாமக்கல்

பெண் வழக்குரைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் அருகே பெண் வழக்குரைஞா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 24 ஜூன் 2022, 11:06 pm IST
பகிர்:

நாமக்கல் அருகே பெண் வழக்குரைஞா் வியாழக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

நாமக்கல்-திருச்சி சாலையில் வளையபட்டி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் தம்பதி கண்ணன்(40), நித்யா (35). கடந்த 2014-இல் திருமணமான இவா்களுக்கு டேனிஷ் (7), தயானி (4) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா். கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. அதேபோல் வியாழக்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த நித்யா வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக மோகனூா் காவல் நிலையத்தில் நித்யாவின் தாய் ராஜேஸ்வரி புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments