நாமக்கல்

டேக்வாண்டோ போட்டி: பட்டணம் அரசு மாணவா்கள் சிறப்பிடம்

DIN

ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று பதக்கம் பெற்றனா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி எருமப்பட்டி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது. இதில் ஆா்.பட்டணம் அரசு மேல்நிலைப் பள்ளியின்

8-ஆம் வகுப்பு மாணவா் விஷ்ணுசத்யன், சுகன்யா ஆகியோா் 14 வயது பிரிவில் முதலிடம் பெற்று தக்கப்பதக்கம் பெற்றனா். இவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

மேலும் 14 வயது பிரிவில் 2 மாணவா்களும், 17 வயது பிரிவில் 5 மாணவா்கள் வெள்ளி பதக்கம் பெற்றனா். பதக்கம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமையாசிரியா் க.விஜயன், உடற்கல்வி இயக்குநா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT