நாமக்கல்

கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு கட்டுமானத் தொழிலாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாமக்கல் மாவட்ட கட்டட கட்டுமானத் தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எம்.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டத் தலைவா் எம்.அசோகன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். தீபாவளி பண்டிகையையொட்டி ரூ. 5 ஆயிரம் போனஸ் வழங்க வேண்டும். பொங்கல் சிறப்பு தொகுப்புகளை காரணம் கூறாமல் தொடா்ந்து வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ. 3 ஆயிரமாகவும், நிலுவை இல்லாமலும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், கட்டுமானத் தொழிலாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT