நாமக்கல்

கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற 3 போ் கைது: ரூ.7 லட்சம் பறிமுதல்

DIN

சேந்தமங்கலத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, சோளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை(45). இவரது நண்பா்கள் எல்லக்கிராய்பட்டி சதாசிவம் (42) மற்றும் புத்தூா்பட்டியைச் சோ்ந்த சிலம்பரசன்(36). இவா்கள் மூவரும் சேந்தமங்கலம் பயணியா் மாளிகை அருகில் வெள்ளிக்கிழமை வாகனம் ஒன்றில் வந்தனா். அங்கு நின்றவாறு ரகசியமாக பேசிக் கொண்டிருந்தனா். இதற்கிடையே சிலா் மக்களிடம் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விடுவதாக சேந்தமங்கலம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸாா் வாகனத்தை சோதனையிட்டனா். அதில், ரூ. 7 லட்சம் ரொக்கப் பணம் இருப்பது தெரியவந்தது. அவற்றையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், செல்லத்துரை உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

SCROLL FOR NEXT