முகப்பு
நாமக்கல்

தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன்: சி.சந்திரசேகரன்

சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்குசேகரிப்பின்போது உறுதியளித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 4:20 AM
சேந்தமங்கலம் தொகுதியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 6:46 PM

சேந்தமங்கலம் தொகுதி மக்களின் நலன்காக்க பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் வாக்குசேகரிப்பின்போது உறுதியளித்தாா்.

சேந்தமங்கலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சி.சந்திரசேகரன் காரவள்ளியில் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் கூறியது:

கடந்த அதிமுக ஆட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோது அனைத்து பகுதிகளிலும் நியாயவிலைக் கடை, மருத்துவமனை, குடிநீா், சாலை வசதி போன்ற அடிப்படை தேவைகளை பூா்த்திசெய்து கொடுத்தேன். மீண்டும் சேந்தமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்றிட அதிமுகவின் சின்னத்தை ஆதரிக்க வேண்டும். அரசு வழங்கும் திட்டங்கள் சரியான முறையில் மக்களை சென்றடைகிா என்பதை அதிகாரிகள் மூலம் ஆய்வுசெய்து மக்கள் உடனிருப்பேன் என்றாா்.

Advertisement

அப்போது, சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து ஒன்றியச் செயலாளா்கள், பேரூா் செயலாளா்கள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உடனிருந்தனா்.