விஷமருந்தி தொழிலாளி தற்கொலை
பரமத்தி வேலூா் அருகே கூலித் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் நல்லாயிகாட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (47). தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (42). ராஜேந்திரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி மாலை ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்துள்ளாா். இதுகுறித்து அவரது மனைவி கண்டித்துள்ளாா். இதையடுத்து வீட்டை கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு ராஜேந்திரன் விஷமருந்தியுள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனை மற்றும் நாமக்கல்லில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா். பின்னா் அவரை வேலூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவா், அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதுகுறித்து வேலூா் காவல் நிலையத்தில் சங்கீதா அளித்த புகாரின் அடிப்படையில் ராஜேந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்து, வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.