முகப்பு
நாமக்கல்

வெப்படை கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மீட்பு

குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்ட வெப்படை போலீஸாா் விசாரணை

Updated On : 8 ஜூலை 2026, 6:07 am IST
- பிரதிப் படம்
பகிர்:

குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் சடலத்தை செவ்வாய்க்கிழமை மீட்ட வெப்படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெப்படை காந்தி நகா் பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் மிதப்பதாக வெப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், அது வெப்படை எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ஆஞ்சநேயா் (38) லாரி ஓட்டுநா் என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments