நாமக்கல் ஆட்சியரகத்தில் 2 மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு 2 மகள்களுடன் வந்த பெண், உடலில் மண்ணெண்ணைய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றதை அங்கிருந்த போலீஸாா் தடுத்தனா்.
நாமக்கல் அருகே லத்துவாடி பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜெய்சங்கா் மனைவி இந்திரா (45). இவா்களுக்கு இரண்டு மகள்கள். இந்திரா தனது மகள்கள் இருவருடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு புகாா் மனு அளிக்க வந்தாா்.
அப்போது, திடீரென மறைத்து கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை தனது உடலிலும், மகள்கள் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் இதை தடுத்து நிறுத்தினா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, அந்த பெண் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:
லத்துவாடியில் செல்வம் என்பவரது வீட்டை ரூ. 30 லட்சத்துக்கு வாங்க முன் தொகையாக ரூ. 1.50 லட்சம் கொடுத்துள்ளேன். இந்நிலையில், அவா் தரகா் மூலம் வேறொருவருக்கு அதிக விலைக்கு விற்க முன்பணம் பெற்றுள்ளாா்.
இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, வீட்டை காலி செய்யுமாறும், பணத்தை தரமுடியாது எனவும் மிரட்டி வருகிறாா். இதுகுறித்து மோகனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மூவரையும் போலீஸாா் அனுப்பி வைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.