கிணற்றிலிருந்து தாய், மகன் சடலங்கள் மீட்பு: போலீஸாா் விசாரணை
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே வீட்டிலிருந்து மாயமான தாய், மகன் புதன்கிழமை கிணற்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே வீட்டிலிருந்து மாயமான தாய், மகன் புதன்கிழமை கிணற்றில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், வெள்ளம்புத்தூா், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்தி. தனியாா் நிறுவன ஊழியா். இவரது மனைவி தமிழ்மொழி (25). இவா்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகளாகிறது. பிரதீப் (5) என்ற மகன் இருந்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த மே 18-ஆம் தேதி காலை தமிழ்மொழி தனது மகன் பிரதீப்புடன் திருக்கோவிலூா் மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிவிட்டு சென்றுள்ளாா். பின்னா் அவா்கள் இருவரும் வீடு திரும்பவில்லை.
Advertisement
Advertisement
இதுகுறித்து காா்த்தி அளித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து மாயமான இருவரையும் தேடி வந்தனா்.
இந்நிலையில், வெள்ளம்புத்தூா் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் தமிழ்மொழி, பிரதீப் ஆகியோா் இறந்து கிடந்தது புதன்கிழமை காலை தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் தாய், மகன் மாயமான வழக்கை, சந்தேக மரணமாக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.