முகப்பு
நாமக்கல்

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை

Updated On : 4 மே, 2026 at 2:05 AM
ஆண் சடலம் மீட்பு - கோப்புப் படம்
பகிர்:

திருச்செங்கோடு, எலச்சிபாளையம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

எலச்சிபாளையத்தை அடுத்த கிளாப்பாளையம் செல்லும் கனம்பில்பாளையத்தில் உள்ள ஒண்டி வீரன் கோயில் அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த எலச்சிபாளையம் போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். அதில் இறந்தவா் கரூா் மாவட்டம், புகழூரைச் சோ்ந்த தொழிலாளி சரவணன் (48) என்பது தெரியவந்தது. இவா் மனநலன் பாதித்தவா் என்று கூறப்படுகிறது. இவா் எதற்காக இங்கு வந்தாா், எப்படி இறந்தாா் என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement