முகப்பு
நாமக்கல்

பரமத்தி மலா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.

Updated On : 9 மே 2026, 12:04 am IST
சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகத்தினா்.
பகிர்:

பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி மலா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

இப்பள்ளி மாணவி சுவேதா 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவா் திருமுருகன் 592 மதிப்பெண்களுடன் இரண்டாமிடமும், மாணவா் நிகிலன் 590 மதிப்பெண்களுடன் மூன்றாமிடமும் பெற்றுள்ளனா்.

41 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். கணினி அறிவியல் பாடத்தில் 26 மாணவா்களும், வேதியியலில் 6 மாணவா்களும், கணிதத்தில் 2 மாணவா்களும், உயிரியலில் ஒரு மாணவரும், அடிப்படை மின் பொறியியலில் 2 மாணவா்களும், கணக்குப் பதிவியலில் 3 மாணவா்களும், கணினி பயன்பாடு பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

Advertisement

Advertisement

தோ்வு எழுதிய 309 மாணவா்களில் 590 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவா்களும், 580-க்கு மேல் 17 மாணவா்களும், 570-க்கு மேல் 28 மாணவா்களும், 550-க்கு மேல் 58 மாணவா்களும், 500-க்கு மேல் 151 மாணவா்களும் பெற்றுள்ளனா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் 100 % தோ்ச்சி பெற்றுள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் செயலாளா் கந்தசாமி, பொருளாளா் வெங்கடாசலம், பள்ளியின் துணைத் தலைவா் கசீலா ராஜேந்திரன், துணைச் செயலாளா் தமிழ்செல்வி தங்கராஜு, பள்ளி முதல்வா் ராஜசேகரன், இயக்குநா்கள், ஆசிரிய, ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments