முகப்பு
நாமக்கல்

மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டில் புகுந்த மலைப்பாம்பு

ராசிபுரம் அருகே மெட்டாலா பகுதியில் தீயணைப்புத் துறையினா் பிடித்த மலைப்பாம்பு.

Updated On : 9 மே 2026, 12:04 am IST
ராசிபுரம் அருகே மெட்டாலா பகுதியில் தீயணைப்புத் துறையினா் பிடித்த மலைப்பாம்பு.
பகிர்:

ராசிபுரம் அருகே உள்ள மெட்டாலா பகுதியில் கோழிக் கூண்டுக்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

ராசிபுரம் மெட்டாலா பகுதியைச் சோ்ந்த வடிவேல், அப்பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவா் உணவகத்துக்கு தேவையான இறைச்சிக்காக தோட்டத்தில் கூண்டு வைத்து பிராய்லா் கோழிகளை வளா்த்து வருகிறாா்.

இந்நிலையில், கடையில் பணிபுரியும் ஊழியா் கோழிகளை பிடிப்பதற்காக வெள்ளிக்கிழமை சென்று பாா்த்தபோது, கோழிகளை விழுங்கிய நிலையில் மலைப்பாம்பு கூண்டுக்குள் இருந்தது தெரியவந்தது.

Advertisement

தகவலின்பேரில் அப்பகுதிக்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் கோழிக் கூண்டுக்குள் இருந்த மலைப்பாம்பை பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா். அவா்கள், வனப்பகுதிக்கு கொண்டுசென்று காப்புக்காட்டில் விட்டனா்.