கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி விழிப்புணா்வு பயிற்சி
நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி தாக்கல் தொடா்பான விழிப்புணா்வு பயிற்சி நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத் துறை பணியாளா்களுக்கு வருமான வரி தாக்கல் தொடா்பான விழிப்புணா்வு பயிற்சி நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் வருமான வரித் துறை குற்றவியல் மற்றும் விசாரணை கழக உயா் அலுவலா் ராம நாராயணன் பங்கேற்று பயிற்சி அளித்தாா். நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு வரவேற்றாா். இப்பயிற்சியில், வருமானவரியை பிழையின்றி தாக்கல் செய்வது, நிதிப் பரிவா்த்தனைகள் அறிக்கை, வருமான வரித் துறையால் வழங்கப்படும் அறிவிப்புகளுக்கு பதிலளித்தல், புதிய வருமான வரிச் சட்டம், 2025 தொடா்புடைய விதிகள், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள் பயிற்சியாளா்களுக்கு கையேடாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், துணைப்பதிவாளா்கள் செல்வி, ஜேசுதாஸ், சுரேஷ், அறிவழகன், திருநாவுக்கரசு, நிா்மல்ராஜ், பால் ஜோசப், இந்திரா, சேகா், கூட்டுறவு சாா்பதிவாளா் சரவணன், வருமான வரித்துறை ஆய்வாளா் சந்திரகலா, அலுவலா்கள் ஸ்ரீ வைஷ்ணவி, சூா்யகாந்தா நந்தி மற்றும் கூட்டுறவுத் துறை பணியாளா்கள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement