முகப்பு
நாமக்கல்

ஜூன் 2, 3-இல் முதியோா் வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம்

Updated On : 30 மே 2026, 1:03 am IST
ரேஷன் கடை - கோப்புப் படம்
பகிர்:

நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 2, 3 தேதிகளில், தாயுமானவா் திட்டத்தின்கீழ் முதியோா் வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகள் வாயிலாக 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கு ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.

Advertisement

Advertisement

இத்திட்டத்தை முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.