சேலம்

முத்தமிழ் சங்கம் சார்பில் மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பு

DIN

சங்ககிரியில் சனிக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கு  இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
கூட்டத்துக்கு சங்ககிரி முத்தமிழ்ச் சங்கத் தலைவர் ஓய்வு பெற்ற உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.மணி தலைமை வகித்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் இரங்கல் தீர்மானம் வாசித்து அவர்களது சிறப்புகள் குறித்து விளக்கிப் பேசினார். 
செயலர் பாலசுப்ரமணியம் முன்னிலை வகித்தார். பொருளாளர் எஸ்டிஎஸ்.கனகராஜ் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள்  அவைத் தலைவர் கா.மாரிமுத்து,  பாலகிருஷ்ணன்,  ஆசிரியர்கள் பூங்கோதை, சந்தோஷ்குமார், ஆர்.முருகன்,  மக்கள் மன்ற நிர்வாகி என்.வேலு, பிரியா, பழனிமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT