சேலம்

வீட்டின் சுவர் விழுந்து தொழிலாளி சாவு

DIN

சங்ககிரியை அடுத்த தேவண்ணகவுண்டனூர் கிராமத்தில் ஒருவரது வீட்டின் சுவற்றை இடித்துக் கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது சனிக்கிழமை சுவர் விழுந்ததில் உயிரிழந்தார்.
தேவண்ணகவுண்டனூர் கிராமம், செட்டிகாடு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தை. இவரது வீட்டு வேலைக்கு எடப்பாடி, பூலாம்பட்டி சாலை, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஜம்பு (48) சென்றிருந்தார். சனிக்கிழமை வீட்டு சுவரை இடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் அவர் மீது விழுந்தது. அதில் பலத்த காயமடைந்த அவர் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு  அவர் இறந்தார். வீட்டின் உரிமையாளர் குழந்தை, கட்டட மேஸ்திரி கோவிந்தன் ஆகிய இருவர் மீது சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT