சேலம்

ரயில் பாதையில் கழுத்தறுத்த நிலையில் இளைஞர் சடலம் மீட்பு

DIN

சேலம் ரயில் பாதையில் இளைஞர் கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் ரயில்வே சரக்கு ஏற்றும் நிலையம் (கூட்ஸ் செட்) உள்ளது. இங்கு புதன்கிழமை காலை மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் சிலர் வந்த போது, ரயில் பாதையில் இளைஞர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் சேலம் ஜங்சன் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, ரயில்வே போலீஸார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு விசாரித்தனர். மேலும் ரயில் பாதை அருகே கிடந்த ரத்தக் கறை படிந்த கத்தியையும் போலீஸார் கண்டெடுத்தனர். இதனால் இறந்து போன இளைஞரை யாரோ கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்து, சடலத்தை ரயில் பாதையில் வீசி இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது. இறந்து போன நபர் யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த கொலையை அறிந்த சேலம் நகர உதவி கமிஷனர் ஈஸ்வரன் மற்றும் ஆய்வாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவாக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக் விளக்கம்

பிரிஜ் பூஷண் சிங்குக்குப் பதிலாக அவரது மகன்: பாஜக முடிவு ஏன்?

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

SCROLL FOR NEXT