சேலம்

மேச்சேரியில் சிதைந்த நிலையில் பெண் சிசு சடலம்

DIN

மேச்சேரியில் பிறந்து ஒரு நாளே ஆன பெண் சிசு சிதைந்த நிலையில் புதரிலிருந்து மீட்கப்பட்டது. 
மேச்சேரி அருகே உள்ள எஜமானூரில் அரசுப் பள்ளிக்கு பின்புறம் உள்ள புதரில் பெண் சிசு கிடப்பதாக புக்கம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் செல்வம் மேச்சேரி போலீஸாருக்கு புகார் அளித்தார். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், சிசுவின் சடலத்தைக் கைப்பற்றி மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சடலம் சிதைந்து காணப்பட்டது.  உடலின் பல இடங்களிலும் நாய்கள் கடித்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன. 
பிறந்தவுடனேயே பெண் சிசுவை வீசிச் சென்றது யார் என்பது குறித்து மேச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT