சேலம்

நாளை முதல் காக்காயன்காடு மின் மயானத்தில்5 நாள்களுக்கு செயல்பாடுகள் நிறுத்தம்

DIN

சேலம் அஸ்தம்பட்டி காக்காயன்காடு  மின் மயானத்தில்பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால்,  மே 16 முதல் 5 நாள்களுக்கு மின்மயான செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது என்று மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியது:-
 அஸ்தம்பட்டி காக்காயன்காடு மின் மயானத்தில் மே 16 முதல் மே 20 ஆம் தேதி வரையிலான 5 நாள்கள் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, பராமரிப்பு நாள்களில் சடலங்களை எரியூட்டுவதற்கு சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண் 28-இல் செவ்வாய்பேட்டை மின்மயானம்,  கொண்டலாம்பட்டி மண்டலம் கோட்டம் எண் 60-இல் சீலநாயக்கன்பட்டி மின்மயானம் ஆகிய மின்மயானங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என சதீஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT