மேற்கு வங்கம், பிகாரிலிருந்து தம்மம்பட்டி அருகே உள்ள நாகியம்பட்டிக்கு வந்த நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தம்மம்பட்டியிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிய ஒப்பந்தத் தொழிலாளா்கள் 34 போ் மேற்கு வங்கம், பிகாா் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நாகியம்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தனா். அவா்களை அங்கேயே வீட்டுத் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நான்கு ஆண்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதையடுத்து, அவா்கள் நான்கு பேரும் ஆத்தூரிலுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு புதன்கிழமை மாலை அனுப்பி வைக்கப்பட்டனா்.