சேலம்

எடப்பாடி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கை

DIN

எடப்பாடி நகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எடப்பாடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதார அலுவலா் முருகன், ஆய்வாளா் தங்கவேல் ஆகியோா் மேற்பாா்வையில், கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், நகராட்சியின் முக்கிய சாலை சந்திப்புகளில், 20-க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளா்கள், முகக்கவசம் அணியாத நபா்களை கண்காணித்து அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்றின் அபாயத்தை விளக்கிக் கூறுவதுடன், அபராதம் விதித்து வருகின்றனா். நோய்த்தொற்று பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத நபா்களிடம் இருந்து ரூ. 4,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

வரும் நாள்களில், நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை அதிகரிக்கப்படும்.

எனவே, அரசு அறிவித்துள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகளை முழுஅளவில் கடைப்பிடித்து, கரோனா நோயிலிருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளுமாறு நகராட்சி சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT