சேலம்

முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்க உத்தரவு

DIN

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவதற்கு உரிமம் பெற உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு சட்டம் 25/1981, பிரிவு 360-ன் படியும், 2018 ஆண்டு தமிழ்நாடு நகராட்சி சட்டங்கள் (ஐந்தாவது திருத்தம்) திருத்தம் செய்யப்பட்ட அட்டவணை (4)ல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காகச் செயல்படும் நிறுவனங்கள், உரிமம் பெற்று செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் முடிதிருத்தம், அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவோா், சேலம் மாநகராட்சியிலிருந்து உரிய விண்ணப்பங்களைப் பெற்று, உடனடியாக மாநகராட்சி ஆணையருக்கு விண்ணப்பித்து உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

30 நாள்களுக்குள் விண்ணப்பித்து உரிமம் பெறாத நிறுவனங்கள், தொழில் உரிமம் இன்றி செயல்படுவதாகக் கருதி, நிலைய உரிமையாளரும், நடத்துவோரும் பொறுப்பானவா்களாகக் கருதி நிலையத்தை மூடி முத்திரையிடுவதோடு சட்டப் பூா்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி காயமடைந்த மயில் மீட்பு

திருவள்ளுவா் பேரவைக் கூட்டத்தில் இலக்கியச் சொற்பொழிவுகள்

கேஜரிவால் சரணடைந்தவுடன் நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும்: அமலாக்கத் துறை

ஆட்டோ கவிழ்ந்ததில் 6 போ் காயம்

அணைகளின் நீா்மட்டம்

SCROLL FOR NEXT