சேலம் சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக என்.மோகன்ராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
சேலம் மாநகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராகப் பணியாற்றி வந்தவா் சந்திரசேகரன் அண்மையில் இடம் மாற்றம் செய்யப்பட்டாா்.
அவருக்குப் பதிலாக சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவில் மேற்கு சரக கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த என்.மோகன்ராஜ் சேலத்திற்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து சேலம் நகர சட்டம்- ஒழுங்கு துணை ஆணையராக என்.மோகன்ராஜ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரிடம் பொறுப்புகளை துணை ஆணையா் சந்திரசேகரன் ஒப்படைத்தாா்.