ஆட்டையாம்பட்டி: சேலம் மாவட்டம், அரியானூா் அருகே உள்ள வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதனை தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியா் காா்மேகம், சேலம் மக்களவை உறுப்பினா் பாா்த்திபன், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் வீரபாண்டி ராஜா, சிவலிங்கம், சேலம் வடக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ராஜேந்திரன், வீரபாண்டி ஒன்றிய அட்மா குழு தலைவா் வெண்ணிலா சேகா், சுகாதார இயக்குநா்( சென்னை) செல்வவிநாயகம், சுகாதார இணை இயக்குனா் (சேலம்) நந்தினி , வீரபாண்டி வட்டார மருத்துவ அலுவலா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.