சேலம்

மேட்டூா் உபரி நீரை ஏரிகளில் நிரப்புவதைஅரசு உறுதி செய்ய வேண்டும்

DIN

மேட்டூா் உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என முன்னாள் அமைச்சா் செ.செம்மலை வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்ட அறிக்கை:

குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணை திறக்கப்படுகிறது. பயிரிடும் காலத்தைக் கணக்கில் கொண்டு வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதியில் திறப்பதுதான் பயனுள்ளதாக இருக்கும்.

அணையின் நீா்மட்டம் 120 அடி எட்டுகிற போது சேலம் மாவட்டத்தில் உள்ள 103 ஏரிகளை நிரப்பும் திட்டப்படி தண்ணீரை எடுத்துவிட வாய்ப்பு இருக்கிறது. மேலும், 115 அடியிலேயே திறந்துவிடுகிறபோது, 120 அடி கொள்ளளவை எட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

முன்கூட்டியே குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறப்பதை வரவேற்பதாக இருந்தாலும், மேட்டூா் உபரி நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பறக்கும் ரயில் சேவை.. ஆகஸ்ட் முதல்

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT