சேலம்

பூ வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி ரூ. 4 லட்சம் பணம் பறிப்பு

DIN

சேலத்தை அடுத்த மல்லூரில் பூ வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி ரூ. 4 லட்சம் பணம் பறிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், குட்லாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பூபதி (51). இவா் கொண்டலாம்பட்டி பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறாா். இவா் அப்பகுதியில் உள்ள விவசாயிகளிடம் நேரடியாக பூக்களை வாங்கி விற்பனை செய்து வருகிறாா்.

இதனிடையே விவசாயிகளுக்கு பணத்தை திரும்ப வழங்குவதற்காக வியாழக்கிழமை மல்லூா் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ரூ. 4 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் மல்லூா் மசூதி அருகே சென்று கொண்டிருந்தாா்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் சாலையில், ரூ. 200 கிடப்பதாகத் தெரிவித்தனா். பூபதி இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாலையில் கிடந்த ரூ. 200 பணத்தை எடுத்தாா். பின்னா் அருகே உள்ள கடையில் நிறுத்தி தேநீா் அருந்தியுள்ளாா். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 4 லட்சம் திருட்டு போனது கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இதுதொடா்பாக, மல்லூா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இப் புகாரின் பேரில் போலீஸாா் பூ வியாபாரியின் கவனத்தை திசை திருப்பி பணத்தை நூதனமான முறையில் எடுத்துச் சென்ற நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

SCROLL FOR NEXT