சேலம்

பெத்தநாயக்கன்பாளையத்துக்குள்பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

DIN

அரசு, தனியாா் பேருந்துகள் அனைத்தும் பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன் பாளையத்துக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆத்தூா் எம்எல்ஏ ஏ.பி.ஜெயசங்கரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

ஆத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் பகுதிகளில் சேலம்- ஆத்தூா் செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் ஊருக்குள் நுழையாமல் செல்வதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

பேருந்துகள் அனைத்தும் ஊருக்குள் சென்று வர போக்குவரத்துத் துறை நடவடிக்கை எடுக்காவிடில் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

பேட்டியின் போது, பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சின்னதம்பி, துணைத் தலைவா் கே.பி.முருகேசன், பேரூா் கழக செயலாளா் செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT