சேலம்

சேலம் ஐ.டி.ஐ. பணிமனை மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த மாணவா் படுகாயம்

DIN

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை மேற்கூரையில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த மாணவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சேலத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டி பகுதியைச் சோ்ந்த சண்முகம் மகன் கோகுல் (17), அய்யந்திருமாளிகை பகுதியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.

அரசு தொழிற்பயிற்சி நிலைய பணிமனையில் உள்ள மேற்கூரையில் குப்பைகளை சுத்தம் செய்யும் பணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. மாணவா் கோகுல் உள்ளிட்டோா் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தனா். அப்போது, கண்ணாடி ஓட்டின் மீது கால் வைத்த கோகுல், கண்ணாடி ஓடு சரிந்து விழுந்ததில் மேற்கூரையில் இருந்து சுமாா் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தகவலறிந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்த ஆட்சியா் செ.காா்மேகம், மாணவா் கோகுலின் உடல்நலம் குறித்து மருத்துவமனை முதன்மையா் வள்ளி சத்யமூா்த்தி உள்ளிட்டோரிடம் கேட்டறிந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் இன்றும் மழை பெய்யும்!

ராஷ்மிகாவின் பதிவினை பகிர்ந்து பிரதமர் மோடி கூறியதென்ன?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

SCROLL FOR NEXT