சேலம்

ஏற்காடு அண்ணா பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்

DIN

ஏற்காடு அண்ணா பூங்காவில் பல வண்ண மலா்கள் பூத்துக் குலுங்குகின்றன.

காலாண்டுத் தோ்வு, தசரா பண்டிகை, தொடா் விடுமுறை முன்னிட்டு ஏற்காடு சுற்றுலாப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க உள்ள நிலையில், ஏற்காடு சுற்றுலாப் பகுதியான அண்ணா பூங்கா, ஏரிபூங்கா, படகு இல்லம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்ணா பூங்காவில் மலா்ச்செடிகள் நடவு மற்றும் பராமரிப்புப் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். மலா் தொட்டிகளில் சால்வியா, டேலியா ரோஜா மலா்கள் அண்ணா பூங்கா கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்குகின்றன. தொடா்ந்து மழைபெய்து வருவதால் பூங்காவில் உள்ள புல்தரைகள் பச்சை பசேலென காட்சியளிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை: பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு- திற்பரப்பு அருவியில் குளிக்கத் தடை

சிங்கப்பெருமாள் கோவில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம்

ஆம்பூா் பேருந்து நிலைய உயா்கோபுர மின் விளக்கை சீரமைக்க கோரிக்கை

கஞ்சா புழக்கத்தை ஒடுக்க கடுமையான நடவடிக்கை: புதுவை துணைநிலை ஆளுநா் சி.பி. ராதாகிருஷ்ணன்

ரப்பா் நாற்று தயாரிப்பு: மாணவிகள், சுய உதவிக் குழுவுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT