முகப்பு
சேலம்

வாழப்பாடி துவாரகமாயி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா

வாழப்பாடி துவாரகமாயி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:13 PM
துவாரகமாயி சாய்பாபா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள்.
பகிர்:

வாழப்பாடி துவாரகமாயி சாய்பாபா கோயில் கும்பாபிஷேக விழா
 வெகு விமரிசையாக நடைபெற்றது.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில், இயற்கையான சூழலில், தியான மண்டபத்துடன் கூடிய சீரடி சாய்பாபா கோயில் அமைந்துள்ளது. 

இக்கோயிலில் ஆகம விதிப்படி துவாரகமாயி சாய்பாபா திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. துவாரகமாயி திருவுருவச்சிலை கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கணபதி ஹோமம், யாக கால சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மலர் அலங்காரத்தில் சீரடி சாய்பாபா, துவாரகமாயி சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பல்வேறு பகுதியைச் சார்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

விழாவில் கலந்து கொண்ட  பக்தர்கள், பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, சாய்பாபா கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஜவஹர், மாதேஸ்வரி, அரசவர்மன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →