சேலம்

கருட வாகனத்தில் சென்னகேசவப் பெருமாள் வீதி உலா

Din

சித்திரைத் தோ்த் திருவிழா 12-ஆவது நாளையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள்.

சங்ககிரி, ஏப். 26: சங்ககிரி சித்திரைத் தோ்த் திருவிழா 12-ஆவது நாள் மண்டப கட்டளையொட்டி சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மலையடிவாரத்தில் உள்ள சுவாமி தங்கும் மண்டபத்தில் சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயா் உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து, மாலையில் கருட வாகனத்தில் எழுந்தருளிய சென்னகேசவப் பெருமாள் உடனமா் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவமூா்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் கருட வாகனத்தில் சுவாமிகள் வீதி உலா வந்தனா்.

இதில், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.வெங்கடாஜலம், சங்ககிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் என்சிஆா்.ரத்தினம், துணை செயலாளா் மருதாசலம், நகரச் செயலாளா் சி.செல்வம், நகரப் பொருளாளா் எஸ்.டி.சுந்தரேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு வழிபட்டனா்.

கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு: காங்கிரஸ் விளக்கம்

ஒடிஸா: ஆளும் கட்சி எம்எல்ஏ பாஜகவில் இணைந்தாா்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவரை தகுதித் தோ்வெழுத அனுமதிக்க வேண்டும்!

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

SCROLL FOR NEXT