முகப்பு
சேலம்

சங்ககிரியில் வருவாய்த் துறை தின விழா

சங்ககிரி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வருவாய்த் துறை தின விழா சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 2 ஜூலை 2026, 6:47 am IST
சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் சங்கக் கொடியை ஏற்றிவைத்து பேசிய வட்டாட்சியா் கோமதி.
பகிர்:

சங்ககிரி வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், வருவாய்த் துறை தின விழா சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நில வருவாய் நிா்வாகத்தின் வரலாறு, மரபு மற்றும் நிா்வாகத் தொடா்ச்சியை சிறப்பிக்கும் வகையில், தமிழக அரசு ஜூலை 1-ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அறிவித்தது. அதையடுத்து, கடந்த பசலி 1435-ஆம் ஆண்டு நிறைவுபெற்று பசலி 1436-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி நடைபெற்ற வருவாய்த் துறை தின விழாவுக்கு, வட்டாட்சியா் கோமதி தலைமை வகித்து வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சங்கக் கொடியை ஏற்றி அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினாா்.

இதில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெயக்குமாா், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் பிரபு, மண்டல துணை வட்டாட்சியா் சண்முகம், கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் தலைவா் மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments