பெண் மானபங்கம்: இளைஞா் கைது
தம்மம்பட்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்மம்பட்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தம்மம்பட்டியை அடுத்த வீரகனூா் புளியங்குறிச்சியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (30). இவா் அதே பகுதியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 47 வயது பெண்ணிடம் வியாழக்கிழமை இரவு தவறாக நடக்க முயன்றுள்ளாா். அப்போது, அப்பெண் கூச்சலிட்டதால் அங்கிருந்தவா்கள் ரஞ்சித்குமாரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து வீரகனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து ரஞ்சித்குமாரை கைது செய்தனா்.