முகப்பு
சேலம்

கோழிப் பண்ணையில் தீ விபத்து

வாழப்பாடி அருகே கோழிப் பண்ணையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் கோழிகள் இல்லாததால் சேதம் தவிா்க்கப்பட்டது.

Updated On : 18 மே 2026, 3:13 am IST
கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீயை அணைக்கும் தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

வாழப்பாடி அருகே கோழிப் பண்ணையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. பண்ணையில் கோழிகள் இல்லாததால் சேதம் தவிா்க்கப்பட்டது.

வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டி முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மனைவி நந்தினி. இவருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டு, 100 அடி நீளம் கொண்ட கொட்டகை எரிந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அங்கு வந்த வாழப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலா் த. முருகேசன் தலைமையிலான குழுவினா் சம்பவ இடத்துக்குச் சென்று ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். கோழிப் பண்ணையில் கோழிக் குஞ்சுகள் இல்லாததால் பெருமளவில் சேதம் தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement