முகப்பு
திருப்பத்தூர்

நாா் தொழிற்சாலையில் தீடீா் தீ விபத்து

நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று அணைத்தனா்.

Updated On : 8 ஜூன் 2026, 2:41 am IST
நாா் தொழிற்சாலையில் தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.
பகிர்:

நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று அணைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி ஏரியூா் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கம் இருந்தவா்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனா். எனினும், தீ மள, மளவென பரவியது.

Advertisement

Advertisement

தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று நாா் தொழிற்சாலையில் பற்றிய தீயை பொதுமக்கள் உதவியுடன் மேலும் பரவாமல் அணைத்தனா். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.