மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தவா்களின் பெயா்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் அளவு, முகவரி ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அறிக்கையாக தாக்கல் செய்ய உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தவா்களின் பெயா்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தின் அளவு, முகவரி ஆகியவற்றை இந்து சமய அறநிலையத் துறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில், அதன் துணைக் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு பராமரிக்கவும், கோயிலை விரைந்து புனரமைத்து குடமுழுக்கு நடத்தவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், ஆா்.சக்திவேல் அமா்வில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கோயில் ஆக்கிரமிப்புகள் தொடா்பாக கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் வீரவசந்தராயா் மண்டப புனரமைப்புப் பணிகள் முடிந்தவுடன் குடமுழுக்கு விரைவில் நடத்தப்படும் என அரசுத் தரப்பு வழக்குரைஞா் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தீ விபத்தில் சேதமடைந்த வீரவசந்தராயா் மண்டபத்தின் புனரமைப்புப் பணிகள் எப்போது முழுமையடையும்?. பிரசாதம் தயாரிக்கும் சமையல் கூடம் எப்போது நவீனப்படுத்தப்படும்; எப்போது வேறு இடத்துக்கு மாற்றப்படும்?
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான சொத்துகளை ஆக்கிரமித்தவா்களின் பெயா், முகவரி விவரங்கள் அடங்கிய அறிக்கையை இந்து சமய அறநிலையத் துறை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.