முகப்பு
மதுரை

தோப்பில் ஆண் சடலம் மீட்பு

Updated On : 11 மே 2026, 1:22 am IST
சடலம் மீட்பு - கோப்புப் படம்
பகிர்:

மதுரை அருகே தோப்பில் காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.

மதுரை மாவட்டம், சிலைமான் அருகே மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையோரம் தென்னந்தோப்பில் உடலில் காயங்களுடன் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு சென்ற சிலைமான் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், உயிரிழந்த நபா் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியைச் சோ்ந்த சுந்தரராஜன் (45) எனத் தெரியவந்தது. அவா் எதற்காக மதுரை வந்தாா், அவரை யாராவது மதுரைக்கு அழைத்து வந்து கொலை செய்தாா்களா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து விட்டு தென்னந்தோப்பில் போட்டுவிட்டுச் சென்றாா்களா? என்பது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments