பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு பள்ளி தலைமையாசிரியர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறிதல், டெங்கு கொசுக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுதல் குறித்து பழனி அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் விஜயசேகரன், மருத்துவர் உதயக்குமார் உள்ளிட்டோர் விளக்கினர். நிலவேம்பு குடிநீரின் முக்கியத்துவம் குறித்து சித்த மருத்துவர் மகேந்திரன் விளக்கினார். வீடு, பள்ளிகள், சுற்றுப்புறங்களில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியை தடுக்கும் முறை குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் விளக்கினார். முகாமில் மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.