முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் படகு தளம் சீரமைப்பு

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், கொடைக்கானல் ஏரி பகுதியில் உள்ள படகு தளம் மற்றும் சேதமடைந்த படகுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:14 am IST
பகிர்:

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், கொடைக்கானல் ஏரி பகுதியில் உள்ள படகு தளம் மற்றும் சேதமடைந்த படகுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
      கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கியுள்ளதால், பல்வேறு இடங்களிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்வது வழக்கம். எனவே, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு தளம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.    தற்போது, சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவதால் சேதமடைந்த துடுப்பு படகுகள்,பெடல் படகுகள் சரிசெய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு வருகிறது.  படகில் சவாரி செய்பவர்களுக்கு பாதுகாப்பு கவசங்களும் வழங்கப்படுகின்றன.  மேலும், படகு குழாமில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.