திண்டுக்கல்

ஊராட்சிகளில் இன்று கிராம சபைக் கூட்டம்

DIN

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 306 ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. 
 இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளது:
 அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தனி அலுவலர் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ)  தலைமையில் முற்பகல் 11 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாவதப் பொருள்கள் தவிர, நெகிழி, குடிநீர், கொசு ஒழிப்பு, ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், நீர் மேலாண்மை இயக்கம், ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். எனவே, ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கிராம சபையில் தவறாமல் பங்கேற்று கருத்து தெரிவித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

ஓய்வு பெற்ற நீதிபதிக்கு பிரிவு உபசார விழா

காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

SCROLL FOR NEXT