திண்டுக்கல்

சோளத் தட்டை ஏற்றி வந்த லாரி தீயில் எரிந்து சேதம்

DIN

சோளத்தட்டை ஏற்றி வந்த லாரி மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில் லாரி முழுமையாக எரிந்து திங்கள்கிழமை சேதமானது.

சேலம் மாவட்டம், பாண்டமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கராஜ். இவருக்கு சொந்தமாக லாரி உள்ளது. அந்த லாரியில் கால்நடை தீவனத்திற்கு தேவையான சோளத் தட்டைகள் ஏற்றப்பட்டு, திண்டுக்கல் மாவட்டம் நோக்கி திங்கள்கிழமை மாலை வந்து கொண்டிருந்தது. குஜிலியம்பாறை அருகே கோட்டநத்தம் ஊராட்சிக்குள்பட்ட எம்.களத்தூா் பகுதியில் வந்த போது, மின்கம்பியில் உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்த கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு வந்த தீ அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்தில், சோளத்தட்டை மற்றும் லாரி ஆகியன முழுமையாக எரிந்து சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெதன்யாகுவை கைது செய்ய உத்தரவு: சா்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

தென்மேற்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை குறித்து ஆட்சியா் ஆலோசனை

இலங்கை சீதா அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: அயோத்தி சரயு நதியில் இருந்து புனித நீர்

பெண்ணுக்கு தபால் வாக்கு மறுப்பு: உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்ததது உச்சநீதிமன்றம்

காங்கிரஸை தேடும் யாத்திரையை நடத்துவாா் ராகுல்: அமித் ஷா

SCROLL FOR NEXT