திண்டுக்கல்

திண்டுக்கல் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தை தொழிற்சங்கத்தினா் முற்றுகை

DIN

கட்டுமானத் தொழிலாளா்களின் பதிவை புதுப்பிக்க வலியுறுத்தி திண்டுக்கல் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தை ஏஐடியுசி தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டனா். வீடு திரும்பா போராட்டமாக அறிவிக்கப்பட்டு நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட ஏஐடியுசி கட்டட தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜி. பாலன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம். பழனியப்பன் முன்னிலை வகித்தாா். போராட்டத்தின்போது மாவட்டச் செயலா் ஜி.பாலன் சிறப்புரையாற்றினாா்.

இதில் பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இதனிடையே, தொழிலாளா் நல வாரிய அலுவலா்கள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். நாள்தோறும் தொழிலாளா்களின் பதிவு புதுப்பித்து வழங்கும் பணி துரிதமாக நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

SCROLL FOR NEXT