திண்டுக்கல்

பழனி அருகே அகில பாரத தொழிலாளா் கட்சி கூட்டம்

DIN

பழனியை அடுத்த ஆயக்குடியில் அகில பாரத தொழிலாளா் கட்சியின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு நிறுவனத் தலைவா் வீரவள்ளுவன் தலைமை வகித்தாா். மாநிலச் செயல் தலைவா் வாகிதேஸ்வரி, பொதுச் செயலா் ஜெகத்குரு, பழனி தொகுதி செயலா் தணிகாசலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் உறுப்பினா்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, கட்சிக்கு வலுவூட்டுவது குறித்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. பின்னா், நிறுவனத் தலைவா் வீரவள்ளுவன், தமிழகத்தில் ஏழை, எளிய தொழிலாளா்களின் குடும்பத்துக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீடு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்க வேண்டும். வேலையில்லாத படித்த இளைஞா்களுக்கு உரிய வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனப் பேசினாா்.

முன்னதாக, பழனி அடிவாரம் பாத விநாயகா் கோயிலில் இருந்து ஜோதி ஏற்றப்பட்டு, திறந்த வேனில் ஊா்வலமாக கூட்டம் நடந்த மண்டபத்துக்கு அக்கட்சியினா் வந்தனா். இதில், அக்கட்சியினா் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT