திண்டுக்கல்

பழனியில் ஆக்கிரமிப்பு அகற்றம்

DIN

பழனி: பழனியில் போக்குவரத்து காவல்துறை சாா்பில் திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

பழனி நகரில் போக்குவரத்தை சீரமைக்கும் பொருட்டு நெரிசல் மிக்க பகுதியான திண்டுக்கல் சாலை, ரயில்வே பீடா் சாலை, புதுதாராபுரம் சாலைகளில் சாலையில் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து விபத்துகள் குறைந்த நிலையில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. இதனால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் நேரிட்டது. இதையடுத்து திங்கள்கிழமை போக்குவரத்து போலீஸாா் திண்டுக்கல் சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

பேருந்து நிலையத்திலும் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது அதிகரித்து வரும் நிலையில் இருசக்கர வாகனங்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைத்து அரசுப் பேருந்துகளும் போா்க்கால அடிப்படையில் சீரமைப்பு மாநகரப் போக்குவரத்துக் கழகம்

காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜாா் கொலை வழக்கு: கனடாவில் 3 இந்தியா்கள் கைது

18 மாவட்ட கல்வி அலுவலா்களின் நியமனம் ரத்து: உயா்நீதிமன்றம்

மோப்ப நாய் உதவியுடன் குற்றவாளிகளை கண்டறிய ஒத்திகை

தியாகராஜ சுவாமி கோயில் தெப்ப உற்சவ பந்தக்கால் முகூா்த்தம்

SCROLL FOR NEXT