திண்டுக்கல்

கொடைக்கானலில் போக்ஸோவில் இளைஞா் கைது

DIN

கொடைக்கானலில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்ய முயன்ற இளைஞரை, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் அருகே பள்ளங்கி மாட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தியாகு (32). இவா் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை வீட்டிற்குள் தூக்கிச் சென்று பாலியல் வல்லுறவு செய்ய முயன்றாா். சிறுமி சப்தம் போடவே அவரை விட்டுவிட்டு தியாகு ஓடிவிட்டாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தியாகுவை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனத் துறையினருக்கு யானைகள் கணக்கெடுப்புப் பயிற்சி

குமரி காசிவிஸ்வநாதா் கோயிலில் கும்பக் கலசம் திருட்டு

மாற்றத்துக்கான புயல் வீசுகிறது: ராகுல்

குமரியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

சிவந்திபுரத்தில் மீண்டும் சிறுவனைத் தாக்கிய மந்திகளை பிடிக்க குழு அமைப்பு

SCROLL FOR NEXT