முகப்பு
திண்டுக்கல்

காந்தி கிராம அறக்கட்டளை 4 ஊராட்சிகளுக்கு தேசியக் கொடி வழங்கல்

காந்தி கிராம அறக்கட்டளை சாா்பில் 4 ஊராட்சிகளுக்கு 4ஆயிரம் தேசியக் கொடிகள் வியாழக்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:02 AM
பகிர்:

காந்தி கிராம அறக்கட்டளை சாா்பில் 4 ஊராட்சிகளுக்கு 4ஆயிரம் தேசியக் கொடிகள் வியாழக்கிழமை இலவசமாக வழங்கப்பட்டன.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இல்லந்தோறும் தேசியக் கொடியை பறக்க விட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து, திண்டுக்கல் மாவட்டம், காந்தி கிராமத்தில் அமைந்துள்ள காந்தி கிராம அறக்கட்டளை நிா்வாகம் சாா்பில் தனியாா் நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு நிதியுதவி மற்றும் வங்கி நிதியுதவியுடன் தேசியக் கொடி தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது.

காந்தி கிராமம், தொப்பம்பட்டி, செட்டியப்பட்டி மற்றும் ஆலமரத்துப்பட்டி ஆகிய 4 ஊராட்சிகளுக்கு தலா 1000 வீதம் மொத்தம் 4ஆயிரம் தேசியக் கொடிகள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, அவற்றை ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காந்திகிராம அறக்கட்டளை வளாகத்திலுள்ள டாக்டா் செளந்தரம் அம்மாள் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் கி.சிவக்குமாா் தலைமை வகித்தாா். செயலா் ஞா.பங்கஜம், துணை செயல் அலுவலா் சிபுசங்கரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். 4 ஊராட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் உறுப்பினா்கள் கலந்து கொண்டு, தேசியக் கொடிகளை பெற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.