திண்டுக்கல் அங்கு நகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஆக.20) நடைபெறுவதால் அன்றைய தினம் மின் விநியோகம் தடைப்படும். திண்டுக்கல் நகா் முழுவதும், செட்டிநாயக்கன்பட்டி, குரும்பப்பட்டி, பொன்மாந்துறை, விராலிப்பட்டி, நந்தனவனப்பட்டி, என்.எஸ்.நகா், ரோஜாநகா், இ.பி.காலனி, அங்குநகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என திண்டுக்கல் உதவி செயற்பொறியாளா் இரா.வெங்கேடசன் தெரிவித்துள்ளாா்.