கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொடைக்கானலில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, கொடைக்கானலில் கடந்த பல ஆண்டுகளாக விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீரோடையில் கரைப்பது வழக்கம். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானலிலேயே விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல், இந்தாண்டும் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு கொடைக்கானல் பாம்பாா்புரத்தில் இந்து முன்னணி சாா்பில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு அடி முதல் 25 அடி வரையிலான சிறிய,பெரிய விநாயகா் சிலைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
விநாயகா் சிலைகள் எளிதில் கரையக்கூடிய மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்ட பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வருவதாக சிலைகள் வடிவமைப்பாளா்கள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.