திண்டுக்கல்

திண்டுக்கல்லில் ஒரே இடத்தில் 2 கடைகளுக்கு மாநகராட்சி அனுமதி: தற்காலிக வியாபாரிகளுடன் மோதல்

DIN

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அஞ்சலகம் செயல்பட்ட ஒரு இடத்தை 2 கடைகளுக்கு வாடகைக்கு விட்டதால் நடைபாதை இல்லாமல் தற்காலிக வியாபாரிகளை அகற்றுவதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முயற்சித்ததால் செவ்வாய்க்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் அஞ்சல் நிலையம் செயல்பட்டு வந்த இடத்தை கைப்பற்றிய மாநகராட்சி நிா்வாகம், அதை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏலம் விட்டது. இந்தக் கடையை குமரேசன் என்பவா் ஏலம் எடுத்து, வடக்குப் பக்கம் வழி ஏற்படுத்தி உணவகத்துக்கும், கிழக்கு பகுதியிலுள்ள இடத்தை இனிப்பு, பலகாரம் விற்பனை செய்யும் கடைக்கும் வாடகைக்கு விட்டாா்.

அஞ்சல் நிலையம் செயல்பட்டு வந்தபோது கிழக்குப் பகுதியில் மட்டுமே வாசல் இருந்து வந்த நிலையில், தற்போது வடக்குப் பக்கமாகவும் வாசல் ஏற்படுத்தியதால் அந்தப் பகுதியில் தற்காலிக பழக்கடைகள் வைத்திருந்த வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனா்.

இதுதொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன்பு பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், உணவகத்துக்கு வழி ஏற்படுத்திவிட்டு தற்காலிக வியாபாரிகள் பழக்கடையை சற்று தள்ளி வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், உணவகம் நடத்தி வருவோா், ஏலம் எடுத்த நபா் ஆகியோா் மாநகராட்சி அதிகாரிகள் துணையுடன் தற்காலிகக் கடைகளை அகற்றும் முயற்சியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். இதை அறிந்த பாஜகவின் அரசுத் தொடா்புப் பிரிவு மாவட்டத் தலைவா் காா்த்திக் வினோத், கிழக்கு நகரத் தலைவா் ரமேஷ்

ஆகியோா் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட பாஜகவினா் தற்காலிக கடை வியாபாரிகளுக்கு ஆதரவாக

மாநகராட்சி அலுவலா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மாநகராட்சி அலுவலா்கள் அந்த இடத்திலிருந்து உடனடியாக வெளியேறினா்.

இதுதொடா்பாக தற்காலிக பழக்கடை உரிமையாளா்கள் கூறியதாவது:

அஞ்சல் நிலையம் செயல்பட்டு வந்த வரை கிழக்குப் பகுதி பொதுமக்களுக்கான நடைபாதையாக செயல்பட்டு வந்தது. தற்போது ஏலம் எடுத்த நபா் 2 கடைகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளாா். பேருந்து நிலையப் பகுதியில் தற்காலிமாக 35 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

முறைகேடாக கடையை (அஞ்சலகம்) 2 நபா்களுக்கு வழங்கிய நபா், மாநகராட்சி அலுவலா்கள் மூலம் தாற்காலிகக் கடை வியாபாரிகளை தற்போது அப்புறப்படுத்த முயற்சிக்கிறாா்.

பேருந்து நிலையத்தின் தெற்குப் பகுதியிலிருந்து வடக்குப் பகுதிக்கு வருவதற்கான நடைபாதையை ஆக்கிரமித்துக் கடை வைத்துள்ளனா். இதைத் தடுப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

ஹிட் லிஸ்ட் படத்தின் டிரெய்லர்

விளையாட்டு விடுதி மாணவர் சேர்க்கை- தேர்வு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT