திண்டுக்கல்

பழனியில் இன்று தைப்பூசத் தெப்பத் தேரோட்டம்

DIN

பழனியில் தைப்பூசத் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியாக, செவ்வாய்க்கிழமை (பிப். 7) தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது.

தைப்பூசத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெற்ற திருவிழாவில் தினமும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்தாா்.

இதையொட்டி, கடந்த சனிக்கிழமை இரவு திருக்கல்யாணமும், வெள்ளித் தோ் உலாவும் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியநாயகியம்மன் கோயில் தேரடியில் தைப்பூசத் தேரோட்டம் நடைபெற்றது. இதையடுத்து, திங்கள்கிழமை மாலை முத்துக்குமாரசாமி தம்பதி சமேதராக பெரிய தங்க மயில் வாகனத்தில் திருவீதியுலா எழுந்தருளினாா்.

தைப்பூசத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை பழனி- உடுமலை சாலையில் தமிழகம், கேரளத்தைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்தனா்.

இன்று தெப்பத் தேரோட்டம்: பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பத்தில், தெப்பத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (பிப். 7) நடைபெறுகிறது. இரவு திருக்கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ், அறங்காவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT